புதன், 28 பிப்ரவரி, 2018

நினைத்தலுக்கு எதிரான ஓர் ஒடுக்குமுறை

மகர்’

இச்சொல்லிற்கான அரசியல் அதிர்வு இன்றைக்கு வரைக்கும் இருக்கத்தான் செய்கிறது.அதற்குக்காரணம் பீமாராவ் ராம்ஜி என்கிற அம்பேத்கர் பிறந்தது ‘மகர்’ சமூகத்தில் என்பதால் அல்லஇந்திய வரலாற்றை காலக்கோட்டில் வரைய முற்படுகையில் மகர் தவிர்க்க முடியாத அளவீடாக மாறிப்போனதுதான் இதற்கு காரணம்பிளாசிப்போர்பிரிட்டிசாரின் கிழக்கிந்திய கம்பெனிஇராணுவம்மகாராஜா ரவீந்திர சிங்ஆங்கிலோ பேஷாவா போர்,...இவற்றின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டுகையில் மகர் இனம் தவிர்த்து வரலாற்று பக்கங்கள் நீள்வதில்லை.அவ்வரிசையில் 2018 ஆங்கிலப் புத்தாண்டு அன்று நடந்தேறிய பீமா கொரேன் கலவரம் சேர்ந்து மகர் வரலாற்று பக்கங்களைக் கூட்டியிருக்கிறது.

நமது தமிழ் பத்திரிகைகள் இச்சம்பவம் குறித்து அவ்வளவாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.பத்திரிகைகளை நாம் கோபித்துக்கொள்வதற்கொன்றுமில்லைபீமா கொரேகன் கலவரத்தை விடவும் முக்கியமானது நமக்கு ரஜினியின் அரசியல் பிரவேசம்டெல்லியிலிருந்து வாக்குக்கேட்க தனி விமானத்தில் வரும் பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளைச் சொல்லி வாக்குகளை அறுவடைச் செய்யப்பார்க்கிறார்ஆனால் இங்கே ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு வாங்கிய ரஜினி தமிழனத்திற்காக அரசியலுக்குள் கால் வைக்கையில் கீதாசாரம் ஒப்பிக்கிறார்ரஜினி அரசியல் எழுதிக்கொண்டிருந்த பத்திரிகைகளிடம் பீமா கொரேகன் கலவரம் குறித்த கட்டுரைகளை எதிர்ப்பார்க்கக் கூடாதுதான்!

அந்த வகையில் ஆங்கிலப்பத்திரிகைகளைப் பாராட்ட வேண்டும்தலையங்கமாகவும்சமூக ஆர்வலரின் கட்டுரைகளாகவும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தனஒரு கட்டுரை ‘ பீமா கொரேகன் நினைவுச்சின்னம்ஒரு வரலாற்று நிகழ்வு அல்லஒடுக்கப்பட்டோரின் அடையாளத்திற்கும் சம உரிமைக்குமான போராட்டம் ’ என்றதுமற்றொரு கட்டுரை ‘ இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிரான வெடிப்புகள்’ என்றது. ‘ பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சி இன்றைக்கு வரைக்கும் தொடர்கிறது’ என்றது மற்றொரு கட்டுரை.ஒரு கட்டுரை ‘ சம உரிமைக்காக நடந்தேறும் சரியான வரலாற்றுத் தவறுகள்’ என்றதுஇக்கட்டுரைகளை வாசிக்கையில் எனக்கு ஜப்பானிய திரைப்பட இயக்குநர் அகிரா குரோசவா இயக்கிய ` RASHOMON ’ என்கிற திரைப்படம் என் நினைவிற்கு வந்தது.இத்திரைபடம் ‘ In a Grove ’ என்கிற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டதுஇக்கதையை எழுதியவரும் அவரேதான்.

ஒரு சாமுராயைக் கட்டி வைத்து மனைவியைக் கற்பழிக்கிறான் ஒரு வழிப்பறி கொள்ளையன்.கடைசியில் சாமுராய் படுகொலைச் செய்யப்படுகிறான்சடலத்தைப் பார்க்கும் ஒரு விறகு வெட்டி நீதிபதியிடம் முறையிடுகிறான்அக்கொலைக்குறித்து சாட்சியங்கள் எப்படி சொல்லப்படுகிறது என்பதுதான் கதை.

வழிப்பறி கொள்ளையன்கற்பழிக்கப்பட்டவள்இறந்து போன சாமுராய் (ஆவியாக ஒரு பெண்ணின் உடலில் இறங்கி மூன்று பேரின் சாட்சியங்களும் தன் சுயமரியாதைக்கு பாதகம் வராமல் மறைத்தாக வேண்டியதை மறைத்து அவரவர் போக்கில் நடந்ததைச் சொல்லிச் செல்வார்கள்எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அதற்குள் அவரவர் நலன் சார்ந்த சுயநலம் இருக்கவே செய்யும் என்பதுதான் அத்திரைபடம் சொல்லவரும் ஒற்றை வரி.

பீமா கொரேகன் கிராமத்தில் நிறுவப்பட்டிருக்கும் ஆங்கிலோ பேஷாவா சதுரத் தூண் நினைவஞ்சலி கூட்டத்தில் நடந்தேறிய கலவரம் குறித்தக் கட்டுரைகள் அப்படியாகத்தான் அவரவர் சார்ந்த சமூகத்தின் சுயநலம் சார்ந்திருந்தது. 200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வை காலத்தாலும் தொலைவாலும் தூரத்தில் இருக்கும் தமிழர்கள் புரிந்துக்கொள்ள கூடுதலாக சில வரலாற்று சம்பவங்கள் தேவைப்படுகிறது.

ஒரு கட்டுரையாளர் ‘ஆங்கிலேயர்களைப்போலவே பேஷ்வா மன்னர் இரண்டாம் பாஜிராவ் தன் இராணுவப் படையில் தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்த்துக்கொண்டார்....’ என்பதை தலையில் அடித்து சத்தியம் செய்திருந்தார்இப்பகுதியைப் படித்ததும் எனக்கு வட்ட மேசை மாநாட்டு நிகழ்வுகள் நினைவிற்கு வந்தனவட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் கலந்துகொள்வதை காந்திஜி விரும்பவில்லைஅவர் வட்ட மேஜை மாநாட்டில் கலந்துக்கொள்வதற்கு முன்பாகவே வைஸ்ராயிடம் சென்று அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கலந்துக்கொள்ளக் கூடாது என முறையிட்டிருந்தார்அதற்கு அவர் பிரத்யேகமாகச் சொன்னக் காரணம் ‘ அம்பேத்கர் மகர் சமூகத்தைச் சார்ந்தவர்மகர் இனத்தவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல’.

மகர் இனத்தவர் மீது காந்திக்கு வரலாற்று புரிதல் இருந்திருந்ததுஆங்கிலேயர்களிடம் அவர்கள் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்கள் என்பது மட்டுமல்லபதினைந்து முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை நடைப்பெற்ற போர்களில் வெற்றிப் படைகளுக்கு காரணக்கருத்தராக இருந்தவர்கள் மகர் இனத்தவர்கள் என்கிற வரலாற்று புரிதல் அதுஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் கால் வைப்பதற்கு காரணமாக இருந்த போர் பிளாசிப்போர்ஐரோப்பிய கண்டத்தில் நடந்தேறிய பிரெஞ்சு ஆங்கிலேய போர் வங்காளத்தில் மையம் கொண்டதுபோருக்குப்பிறகு வங்காளம் பிரெஞ்சிடமிருந்து ஆங்கிலேய கிழந்திய கம்பெனி வசமானதுவங்காளத்தை ஆண்ட நவாப் சிராஜ் உத் தவுலா பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி உதவியுடன் ஆங்கிலேயப் படைகளைத் தாக்கினர்.அத்தாக்குதலுக்குப்பிறகு இராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய கிழக்கிந்தியப் படை நவாப் படையைத் தோற்கடித்ததுஇது நடந்த ஆண்டு 1757 . இதிலிருந்து சரியான நூறாவது ஆண்டில் ஆங்கிலேய கிழக்கிந்தியப் படை இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியதுஇந்தப் போர் நடந்தேறிய இடம் பிளாசிஇப்போரில் மகர் இனத்தவர்கள் ஆங்கிலேய கிழக்கிந்திய படைகளின் கீ்ழ் போர் புரிந்தார்கள் என்கிறது வரலாறு.

அதன்பிறகு நடந்தேறிய இந்தியப் போர்களில் மகர் இனத்தவர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். . மராட்டியத்தில் இந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவரான சத்ரபதி வீர சிவாஜி வெற்றிக்குப் பின்னும்அவருக்குப் பிறகு அவரது மூத்த மகனான சாம்பாஜி சிவாஜி தலைமையிலான மராட்டிய போர்களில் மகர் இனத்தவர்களின் பங்கு அளப்பெரியதாக இருந்திருக்கிறதுஇந்த வரலாற்று புரிதலைத் தெரிந்திருந்த காந்திஜி அவர்கள் வைஸ்ராயிடம் மிகக்கடுமையாக அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கலந்துக்கொள்வதை ஏற்க முடியாது என்றார்.

வட்ட மேசை மாநாடு நடைபெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் கொரேகன் கிராமத்திற்கு சென்றிருந்தார்அவர் சென்றிருந்த ஆண்டு ஜனவரி 1927. அப்பயணம் அவருக்கு மேலும் சில வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டியிருந்தது. ‘அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி அல்ல’ என்கிற காந்தியின் குற்றச்சாட்டுக்கானப் பதிலை அவர் கொரேகன் கிராம வரலாற்று பக்கத்திலிருந்து கொடுத்திருந்தார்.

‘ காந்திஜி சொல்வதைப்போல மகர் இனத்தவர்கள் உயர் சாதியினர் என்றால் மனு தர்மத்தின் படி ஆட்சி செய்த பேஷாவா முதலாம் பாஜி ராவ் ஆட்சியிலும் ( 1775 – 1851 ), இரண்டாம் பாஜி ராவ் ஆட்சியிலும் ( 1851 – 1881 ) தன் போர்ப்படையில் ஏன் மகர் இனத்தவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை....?. அம்பேத்கரின் இக்கேள்விக்கு காந்திஜியிடம் பதில் இருந்திருக்கவில்லை.


பீமா கொரேகன் கலவரம் குறித்து ஒரு நண்பரிடம் விவாதித்துக்கொண்டிருந்தேன்அவர் கேட்டார் ‘ ஒரு இந்திய மன்னருக்கு எதிராக ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றியை மகர் இனத்தவர்கள் கொண்டாடுவது சரியா...?’ இக்கேள்வி அவரது கேள்வி அல்லஇந்துத்துவ கேள்வி.

இந்துகள் ஒரே நேரத்தில் இரண்டு விதமான அடிமைச்சிக்கலிலிருந்து மீண்டு வரும் நிலைக்கு ஆட்பட்டிருந்தார்கள்ஒன்று ஏகாதிபத்தியம்மற்றொன்று தேசியம்இதைத்தான் மறைந்த எழுத்தாளர் யு.ஆர்அனந்தமூர்த்தி ‘இந்துத்துவவாதிகள் ஒரே நேரத்தில் கோபர்நிகஸ் காலத்துடனும் ஐன்ஸ்டீன் காலத்துடனும் வாழக்கூடியவர்களாக இருந்தவர்கள் ’ என்றார்பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்கள் இஸ்லாமியர்கள்அவர்களின் ஆட்சியை முறியடிக்கும் தேவை இந்துத்துவவாதிகளுக்கு இருந்ததுஇந்துத்துவவாதிகளின் போர்ப்படைகள் சுல்தான்களிடம் எடுபடவில்லைஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்யும் பொருட்டு இந்தியாவிற்குள் வந்தார்கள்அவர்கள் சுல்தான்களிடம் போரிட்டு வெற்றியும் பெற்றார்கள்.. இப்போரில் இந்துக்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவானவர்களாகியிருந்தார்கள்.

கடந்த வருடம் இப்படித்தான் திடீரென சூடுப்பிடித்தது பக்கிங் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘ஆனந்த மடம்’ நாவல்நாவலின் படி வங்காளத்தில் சுல்தான் ஆட்சி நடக்கிறதுசுல்தான் ஆட்சிக்கு எதிராக இந்து இளைஞர்கள் கூடுகிறார்கள்நாவலின் கதாநாயகன் பவாநந்தன்அவனது தலைமையில் ‘ வந்தே மாதரம் ’ பாடிக்கொண்டு சுல்தான் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார்கள்சுல்தான் படையை இந்து இளைஞர்களால் முறியடிக்க முடியவில்லைஆகவே அவர்கள் ஆங்கிலேயர்களுடன் கைக்கோர்க்கிறார்கள்இரு படைகளும் சேர்ந்து சுல்தான் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்கள்இந்நாவலில் இரு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் இடம் முக்கியமானது. ‘ சுல்தான் ஆட்சிக்கு எதிராக ஆங்கிலேயர்களிடம் கைக்கோர்கிறோமே...?’ என ஒரு பாத்திரம் கேட்க அதற்கு மற்றொரு பாத்திரம் இவ்வாறு சொல்லும் ‘ ஆங்கிலேயர்களிடம் ஒப்பிடுகையில் சுல்தான்கள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியவர்கள்...’ .

மைசூர் சமஸ்தானம் திப்பு சுல்தான் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்ததுஅவனது ஆட்சி ஆங்கிலேயப்படைகளால் முற்றுக்கு வந்ததுஇந்த ஆங்கிலேயர்களின் வெற்றியை இந்துத்துவா தன் வரலாற்று பக்கத்தில் பொன் எழுத்துகளால் பொறித்திருக்கிறதுஇந்திய உள்நாட்டு போரில் இந்துகள் ஆங்கிலேயர்களிடம் கைக்கோர்த்து பல வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்அப்படியானதுதான்  மூன்றாம் மராட்டியப் போர்ஆனால் இப்போர் குறித்த வரலாற்று சுவட்டிற்கு மராட்டியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க காரணம்...? இப்போரில் சுல்தான்களுக்கு பங்கில்லைஇப்போர் நடைப்பெற்றது பேஷவா ஆங்கிலேயர் இருவருக்கிடையில்இப்போரில் மகர் இனத்தவர்கள் ஆங்கிலேய வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள்.

மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி முகலாய ஆட்சியை முறியடிக்கையில் மகர் இனத்தவர்கள் சிவாஜி படையில் இருந்திருக்கிறார்கள்இந்த இடத்தில் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்சிவாஜி இந்து சாம்ராஜ்யம் நிறுவினாலும் அவருக்கு பின்னே வந்த அவரது மூத்த மகன் சாம்பாஜி முகலாயர்களிடம் தோற்று நிர்க்கதியாக நிற்கவே செய்தான்சாம்பாஜி சுல்தானால் கொன்றொழிக்கப்பட்டு அவரது உடல் ஓர் ஆற்றாங்கரையில் அழுகிய நிலையில் உடல்வேறுகால் வேறாகக் கண்டெடுக்கப்பட்டதுஅவரது உடலைக் கண்டெடுத்து மரியாதைச் செய்து அடக்கும் செய்தவர் மகர் இனத்தவர் கோவிந்த் கைய்க்வாட்சிவாஜி மீதான மரியாதையால் அவர் அதைச் செய்திருந்தார்அவருக்கு நினைவுச்சின்னம் எழுப்பினார்கால ஓட்டத்தில் கோவிந்த் கைய்க்வாட் இறந்ததும் மகர் இனத்தவர்கள் சாம்பாஜி கல்லறை இருக்கும் அதே ஊரில் கோவிந்த் கைய்க்வாட்டுக்கும் நினைவுச்சின்னம் எழுப்பினார்கள்இருவரின் நினைவுகளையும் ஒரு சேரக் கொண்டாடினார்கள் மகர் இனத்தவர்கள்சாம்பாஜி மன்னரின் வாழ்க்கை வரலாறு பற்றிப்பேசுகையில் கோவிந்த் மகர் குறித்து பேசுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டதுமேலும் சத்ரபதி சிவாஜி முகலாயர்களை வீழ்த்தி இந்து சாம்ராஜ்ஜியம் அமைத்ததை வரலாறு பெருமைப்பேசுவதற்கிடையில் அவரது மூத்தமகன் முகலாயர்களால் வீழ்த்தப்பட்டு சாம்பாஜியின் அழுகிய உடல் ஆற்றாங்கரையில் கண்டெடுக்கப்பட்ட வரலாறு சேர்கையில் இந்துத்துவா எடுக்கும் வீரம் பொதிந்த இந்து அரசியல் தவிடுபொடியாகி விடுகிறதுமராட்டியத்தில் இந்துத்துவா சிவாஜியையும்மகர் இனத்தவர்கள் சாம்பாஜியையும் தூக்கிப்பிடிக்கிறார்கள்இந்த முரண் மராத்தியர் – மகர் இருவருக்கிடையில் தீராப்பகையை ஏற்படுத்துகிறது.

பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் போர் படைகளில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே உச்சப்பட்ச மரியாதை இருந்ததுமேலும் அவர்களுக்கு மட்டுமே கட்டாயக் கல்வியும்நல்ல உணவும் சம்பளமும்இழப்பீடும் தரப்பட்டதுஆகவே மகர் இனத்தவர்கள் போர் படையில் தொடர் ஆர்வம் காட்டி வருபவர்களாக இருந்தார்கள்அவர்களின் வளர்ச்சியைத் துண்டிக்கும் பொருட்டுதான் மராட்டிய மண்ணில் மநு தர்மம் ஆட்சி நிறுவும் முயற்சிகள் நடைபெற்றது.

இதே காலத்தில் பஞ்சாப் பகுதிகளை ஆண்ட மன்னராக இருந்தவர் மகாராஜா ரஞ்சித் சிங்இவரது படையின் கீழ் பணியாற்றவும் மகர் இனத்தவர்கள் ஆர்வம் காட்டினார்கள்மகாராஜா ரஞ்சித் சிங் அவர்களை இந்து மதத்திலிருந்து சீ்க்கிய மதத்திற்கு மாற்றி அவர்களைத் தன் படையின் கீழ் இணைத்துகொண்டார் 

மகர் இனத்தவர் தங்களை பேஷ்வா படையில் சேர்த்துக்கொள்ள தொடர்ந்து போராடிக்கொண்டு வந்தார்கள்தீண்டத்தகாதவர்கள் ஆயுதம் எடுக்க தகுதியற்றவர்கள்அவர்களுக்கு கல்வி என்பது கிடைக்கக்கூடாத ஒன்று,...இப்படியான ஒடுக்குமுறை தலையெடுக்கையில் மகர் இனத்தவர்கள் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இணைய வேண்டிய அவசியம் நேரிட்டது.

மராட்டிய போர் பேஷாவா ஆங்கிலேயர்களுக்கிடையில் மூன்று முறை நடந்தேறியிருக்கிறதுகடைசியான போரில் பேஷ்வா தரப்பில் இருபதாயிரம் பேர்ஆங்கிலேய தரப்பில் எண்ணூற்று முப்பது நான்கு பேர்அதில் ஐநூறு பேர் மகர் இனத்தவர்கள்.. இப்போரில் ஆங்கிலேயப் படை வெல்ல மநு தர்ம ஆட்சி முற்றுப்புள்ளிக்கு வருகிறதுஆங்கிலேயப் படை வெற்றிப் பெற்ற நாளாக ஜனவரி 1, 1818 வரலாற்றில் இடம் பெறுகிறது.

பொதுவாக எந்தவொரு போர் நடந்து முடிந்தாலும் போரில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு ஸ்தூபி எழுப்புவது ஆங்கிலேய கம்பெனியின் வழக்கமாக இருந்து வந்ததுஅதன்படி போர் நடந்தேறிய இடத்தில் ஒரு சதுர தூண் எழுப்புகிறது ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி.அதில் அப்போரில் மரணமுற்றவர்களின் பெயர்களை வடிக்கிறதுஅந்நாட்கொண்டு மகர் இனத்தவர்கள் போரில் தன் வாரிசுகளைப் பறிக்கொடுத்தவர்களுக்காக நினைவஞ்சலி செலுத்தி வந்திருக்கிறார்கள்இந்த இடத்தில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்நினைவுத்தூண் என்பது இறந்தவர்களின் நினைவுச்சின்னம்அது வெற்றியின் அடையாளம் அல்லஆனால் மராட்டியர்கள் அதைப்பார்ப்பது மகர் இனத்தின் வெற்றி சின்னமாகத்தான்!




இது போன்ற நினைவுத் தூண்கள் இந்தியாவில் நிறைய உண்டுபுதுடெல்லியில் நிறுவப்பட்டிருக்கும் இந்திய கேட் முதல் உலகப்போரில் பங்கேற்று கிழக்கிந்திய கம்பெனிக்காக உயிர்த்துறந்த இந்தியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு எழுப்பப்பட்ட ஒன்றுஇன்றைக்கு அவ்விடம் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தளம்அந்த இடத்தில் கூடும் கூட்டத்தைக் கலைப்பதற்காக கலவரமோதடியடியோ நடந்தால் எப்படியானதாக இருக்கும்...? ஜனநாயகப் படுகொலைதான் இல்லையா!அப்படியான கூடுகைதான் பீமா கொரேகன் நினைவுத்தூண் இடத்திலும் கூடியிருந்ததுஇரு நூற்றாண்டு நினைவு கூடுகை என்பதால் கூட்டம் எதிர்ப்பார்த்ததை விடவும் அதிகமாக இருந்ததுஇதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் மராட்டிய அரசு கலவரத்தைத் தூண்டியிருக்கிறது.

இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இந்தாண்டு இப்படியான திடீர் கலவரம் நிகழக் காரணம்...?இன்றைக்கு இந்துத்துவாவின் தலைமையிடம் குஜராத்அம்மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டச்சபைத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற தலித் இளையத்தலைவர் ஜிக்னேஷ் மெவானியின் வெற்றியும்அத்தேர்தலில் ஆளுங்கட்சியின் சரிவும்அடுத்து வர இருக்கின்ற கர்நாடக சட்டசபைத் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல்,... இவற்றைக் கருத்தில்கொண்டு பீமா கொரேகன் கலவரம் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த இடத்தில் கனடா தத்துவ மேதை அயன் ஹாங்கிங்  நினைவு கூறத் தக்கவர்அவர் நூற்றாண்டு அரசியலைக் கணித்தவர் அவரது கோட்பாடு இது ‘ பதினெட்டாம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள்மக்கள் உடலின் மீது ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துவார்கள்பத்தொண்பதாம் நூற்றாண்டில் மக்கட்தொகை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடக்கும்.இருபதாம் நூற்றாண்டின் இலக்கு ஒன்றுதான்மக்களின் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துவது’

இந்தியாவில் நடந்தேறுவது ஆண்டான் அடிமை அரசியல்அரசன் தன்னை தேர்ந்தெடுத்த அடிமைகளை மறந்துகொண்டிருக்கிறார்அடிமைகள் தன்னை அடிமையாக்கியவர்களை நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்அப்படியான நினைத்தலுக்கு எதிரான ஒடுக்குமுறைஅதை கட்டுடைக்கும் பெருவெடிப்பு இவை இரண்டும் சேர்ந்ததுதான் பீமா கொரேகன் கலவரம்.

மகர் சமூக எழுச்சிப் பேராட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தமிழ்நாட்டிற்கொன்று இருக்கிறதுமகர் சமூகத்தினர் பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறவர்கள்குறிப்பிடும்படியான வெற்றியும் பெற்றவர்கள்.அவ்வெற்றியின் அடையாளத்தில் ஒன்றுதான் பீமா கொரேகன் நினைவுத்தூண்அத்தூணின் கீழ் அவர்கள் சங்கமிக்கையில் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாகத்தான் திரள்கிறார்களேத் தவிர ஒருபோதும் தங்களை அவர்கள் உயர் சாதியினராகப் பாவித்துக்கொள்வதில்லைஆனால் தமிழ்நாட்டில் ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடர் ஒடுக்குமுறைக்கு உள்ளான சில சாதிகள்அச்சாதிகளை வழிநடத்தும் தலைவர்களால் தங்களைத் தாங்களே உயர்ந்த சாதிகள் என அறிவித்துக்கொள்ள முணைந்திருக்கிறார்கள்அவர்களுக்கு பீமா கொரேகன் நினைவுத்தூண் சொல்லும் செய்தி ஒன்றுண்டு. ‘நான் ஒடுக்கப்பட்டவன் என ஒரு வாய் சொல்கையில் வெட்கப்பட வேண்டியது காதுகள்தானே தவிர வாய் அல்ல...’

திங்கள், 26 பிப்ரவரி, 2018

கவிதை நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன

நூல்கள் வரவேற்கப்படுகின்றன

சிகரம் இலக்கியப்போட்டி
2017 ஆண்டுகளில் வெளியான கவிதை நூல்கள் மட்டும். இரண்டு படிகள்

மரபு

ஹைக்கூ

புதுக்கவிதை

மொத்தப்பரிசு ₹15000
கடைசி தேதி - மார்ச் 31

பழ.அன்புநேசன்

ஆசிரியர் சிகரம்
4/14 பெரியார் நகர்
சேமங்கி அஞ்சல்
கரூர் - 639117

தொடர்புக்கு - 9965246922

2017 நூல்கள் வரவேற்கப்படுகின்றன




சாதி மறுப்பு திருமணம் செந்துகொள்ள விரும்புபவரா நீங்கள்...?

சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு படுகொலை செய்யப்படலாம். அவர்களுக்கு உதவும் பகுதி இது

Tamil Nadu Techie Creates App That Protects Couples From Honour Killings! https:

//
www.thebetterindia.com/?p=131504 via @thebetterindia

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

நான் கொலை செய்யும் பெண்கள்

நான் கொலை செய்யும் பெண்கள் ( சிறுகதைத் தொகுப்பு )  - லதா



இலங்கையில் பிறந்த லதா தற்போது சிங்கப்பூரில் வசிப்பதாக ஆசிரியர் குறிப்பு சொல்கிறது. சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசு பத்திரிகையின் துணை ஆசிரியரும் கூட.

இவரது முதல் சிறுகதைத்தொகுப்பு - நான் கொலை செய்யும் பெண்கள்.

அடையாளம்

மழை - அப்பா

நாளை ஒரு விடுதலை

இதுவரை

பயணம்

தமிழுக்கு அமுதென்று பேர்

முகாந்திரம்

வீடு

அறை

படுகளம்

என பத்து சிறுகதைகளை உள்ளடக்கிய கச்சிதமான தொகுப்பு இது. 102 பக்கங்கள்.

முதல் கதை அடையாளம் மற்ற பெண் எழுத்தாளர்கள் எழுதும் கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருந்தது.

இந்திய குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் சிங்கப்பூர் மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொண்டு அவள் படும் இன்னலை கதை பேசியிருக்கிறது.

கதையின் தொடக்கமே இவ்வாறு இருக்கிறது. 'யூ இண்டியா...?'

இந்தியக்குடும்பத்து பெண்களைப் போலதான் அவளும் சிங்கப்பூரில் சமைக்க, துவைக்க, கடைத்தெருவிற்குச் செல்ல, குழந்தைகளை வளர்க்க என இருக்கிறாள். கணவன் ,மாமனார்,பிள்ளைகளுக்கு விரும்பும் உணவுகளை சமைத்துகொடுக்கும் அவள் பழைய சோத்தையும் ஊறுகாயும் சாப்பிட்டு பசியாறுகிறாள். ஒருமுறை கணவன் அவளிடம் 'என்ன இது பிச்சைக்காரி மாதிரி சாப்பிட்டுக்கிட்டு' எனக்கேட்குமிடமும் , அதைப் பொறுக்கமுடியாத அவள் சாப்பாட்டை கொட்டுமிடமும் கதையின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிள்ளை படிக்கக்கூப்பிட அவர்கள் அப்பாவிடம் படித்துக்கொள்கிறேன் என ஓட 'நான் எம்.ஏ உங்க அப்பா ஏ லெவல்தான்' எனச்சொல்ல அதற்கு குழந்தை இந்திய படிப்பெல்லாம் சிங்கப்பூருக்குச் செல்லாது என குழந்தை சொல்லிச்செல்கிற இடத்தில் வாசகன் ஒரு கணம் நின்றுவிடத்தான் செய்கிறான்.

தோழியின் திருமணத்திற்கு செல்கிறாள் அவள் . பல வெள்ளிகள் செலவில் மேக்கப் செய்து... திருமணம் இந்திய திருமணத்தைப்போல ரசிக்கும் படியாக இல்லை. எந்த திருமணத்திற்கு சென்றாலும் அவளுக்கு கணவன் குமரன் நினைவிற்கு வருகிறான்.  ஏன் இங்கே யாருமே தனக்கு நெருக்கமாக இல்லை.... என்கிற யோசனையுடன் மொய் எழுத பர்ஸை திறக்க அதற்குள் சிவப்பு நிற சிங்கப்பூர் குடியுரிமை அட்டை இருக்கிறது.

' ஐ யெம் சிங்கப்பூரியன் '  கட்டுப்படுத்தமுடியாமல் அழுகிறாள் அவள்.

இக்கதை  இரண்டு விடயங்களைப் பேசுகிறது. ஒன்று குடும்பத்தில் பெண்கள் படும் அவலம். மற்றொன்று இந்திய பெண்கள் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றாலும் சக வாசிகளுடன் அவர்கள் சந்திக்கும் அவலம் இரண்டு கூறுகளை பேசியிருக்கும் இக்கதை சிங்கைத்தமிழ் சிறுகதையில் மிக முக்கியமான கதையென்றே எனக்குத் தோன்றுகிறது.

மழை - அப்பா

இக்கதை ஒரு நாள் மழை பெய்கையில் அப்பா ரேடியோ கேட்கிறார்.  நிலவில் நீல் ஆம்ஸ்டோரோங் கால் வைக்கப்போகும் செய்தியைச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

அப்பா - அப்பா மீது வீசும் துர்நாற்றம், மது, புகையிலை, .....என அப்பா குறித்த நினைவுகளைக் கதை பேசிச்செல்கிறது. சில ஆண்டுகளுக்குப்பிறகு வீடு மாற்றுகிறார்கள்.

அதே போன்று ஒரு மழை கொட்டுகிறது. அவளுக்கு முப்பது வருஷத்திற்கு முன் நிலவிற்குச் சென்ற அப்பலோ நினைவிற்குச் சென்றதும் அப்பா ரேடியோ கேட்டதும் நினைவிற்கு வந்துச்செல்கிறது.

இக்கதையில் மாமனார் - மருமகன் - மகள் - பேரப்பிள்ளைகள் குறித்த பந்தம் அழகான காட்சிப்திவு என்றுதான் சொல்ல வேண்டும்.

படுகளம் என்கிற சிறுகதை தீமிதி திருவிழா காட்சியுடன் மகாபாரத இதிகாசக் கதையைத் தழுவி அபிமன்யூ சக்ரவியூகத்திலிருந்து தப்பித்து வர முடியாதச் சூழலைச் சொல்லி பெண்களை காவு வாங்கும் சூழ்ச்சியைச் சொல்லி நிற்கிறது.

இதே போன்று தமிழுக்கு அமுதென்று பேர் என்கிற சிறுகதை ஒரு மாறுபட்ட சிறுகதை. 2200 ஆம் ஆண்டுகளில் எழுத்துகளின் தேவை எப்படியாக இருக்கும் , குறிப்பாக தமிழ் எழுத்துகளின் அவசியமும் அதற்கான தேவையும் எப்படியானதாக இருக்கும் என்பதை நூறு நூறு ஆண்டுகளாக பிரித்து கதை புனையப்பட்டுள்ளது.

இக்கதையின் தலைப்பில் சிறு திருத்தம் செய்ய வேண்டும். பாரதிதாசனின் வரியைத்தான் நூலாசிரியர் கதைக்கு தலைப்பாகச் சூட்டியிருக்கிறார். தமிழுக்கும் அமுதென்று பேர் என்றே அவர் கவிப்பாடினார். அப்படியாகவே தலைப்பு சூட்டப்பட்டிருக்க வேண்டும். 'ம்'.மேலும் தலைப்பின் பெயரில் ஒரு கதையுமில்லை. பிறகு ஏன் இந்தத் தலைப்பு என்கிற கேள்வியும் எழவேச் செய்கிறது.

பொதுவாகச் சொன்னால் பெண்ணியமும் புனைவும் தமிழிசமும் புனைந்து தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு இது. சிறுகதையாசிரியர் லதா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

நான் கொலை செய்யும் பெண்கள்

சிறுகதைகள்

முதல் பதிப்பு - 2008

காலச்சுவடு பதிப்பகம்



வியாழன், 22 பிப்ரவரி, 2018

வல்லினம் - சிறுகதைப்போட்டி

சிறுகதைப்போட்டி

கடைசி நாள் - 31.03.2018



வல்லினத்தின் ‘படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம்’ 2017 http://vallinam.com.my/version2/?p=3617

புதன், 21 பிப்ரவரி, 2018

குமுதினி ஏன் பிந்தி வந்தாள்?

எழுத்தாளர் ஷோபா சக்தி -

ஆனந்த விகடன் தடம் இதழில்

நான் எழுத்துலகத்திற்கு வரக்காரணமான கவிதை இதுவென்று சுட்டிக்காட்டும் கவிதை இது.

குமுதினி எனும் படகில் வந்த தமிழர்கள் 60 பேரை இலங்கை கடற்படையினர் வெட்டிக்கொள்கிறார்கள்.  அவ்வுடல்களை அடக்கம் செய்த நிலாந்தன் எழுதிய கவிதை இது.

இக்கவிதை - நிலாந்தன் வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது.
குமுதினி ஏன் பிந்தி வந்தாள்? http://www.nillanthan.net/?p=215

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன்.


சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது. 


ஆவுடத்தங்க மதினி
சுப்பு மதினி
காளியம்மா மதினி
அமராவதி மதினி
குருவு மதினி
மாணிக்க மதினி


என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.

 இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார்.

முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி.


பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அறிமுகம்படுத்தப்படுகிறது.


இக்கதையின் ஒற்றை விழுமியம்   செம்பகம் தாயில்லாமல் பல பெண்களிடம் வளர்வதும் பிறகு வளர்ந்து பெரியவனாகி திரும்புகையில் அதே ஏக்கம் இருப்பதும் அந்த ஏக்கத்தைத் தணிக்க மதினிகள் மதினிகளாக இல்லாமல் இருப்பதுதான்..

காணிநிலம் இதழ் அறிமுகம்

2018 ஆம் ஆண்டின் புது இதழ் - காணிநிலம் - கிடைத்தது.  அதன் உபவரி மிகவும் பிடித்திருந்தது. சொல் விளையும் பூமி.

பூமி - கேணி- தோணி-ஏணி என தலையங்கக் கட்டுரை வித்தியாசம்.

அபரஞ்சி சிறுகதை தொழுநோயாளிகளுக்கு சேவை செய்யும் பெண்ணை மையமாக வைத்து கதை நெய்யப்பட்டிருந்தது. வேலைக்கார பெண்கள் வேலை செய்யும் வீட்டில் படும் இன்னல்களை கதை பேசியிருந்தாலும்  ' குணமானதுக்கு அப்புறமும் மருந்து போட வர்றதாச் சொல்லிட்டு எம் புருசன இழுத்துட்டு போவப் பாக்கியா....? என்கிற இடம் பெண் செவிலியர்கள் சந்திக்கும் இன்னலின் உச்சம்.

வெற்றிப்பேரொளியின் முத்தச்சரித்திரம் கவிதையில்

'ஆனாலும் அழுத்தமாய்
மிக அழுத்தமாய்ப் பதிந்து கிடக்கிறது
ஒரு கோபப் பொழுதில்
நீ கொடுத்த கடிமுத்தம் '

என்கிற வரிகள் நீண்ட கவிதையின் முடிவில் சிரிக்க வைக்கும்படியாக இருந்தது.

கல்யாணிஜியின் இக்கவிதை எனககு மிகவும் பிடித்திருந்தது.

'அது பறந்து விடுவதற்கு முன்
திறந்துவிட நினைத்தேன்

நான் திறந்துவிடும் முன்
அது பறந்துவிட நினைத்தது.

நான் திறந்துவிடவும் இல்லை
அது பறந்துவிடவும் இல்லை
இது வரை.'

இதே போன்று சுகன்யா ஞானசூரியின்
யாழினிகள் தெரிவதில்லை என்கிற இரு கவிதைகள் ஈழ உக்கிரப்போர் வடுக்களை நினைவுப்படுத்தியது.

ஷான் எழுதியிருக்கும் டான் பிரவுனின் ஆரிஜின் என்கிற கட்டுரை டாவினசி கோட்டில் தொடங்கி மதம் , பிரச்சாரம் , கண்டுப்பிடிப்பு என ஆழமான பதிவுகளைக் கண்டது.

இதுதவிரவும் இந்த இதழில்

எஸ்.சங்கரநாராயணன் , வ.தெ.சு.கவுதமன், சந்திரா மனோகரன், தமிழ் உதயா, பாலைவன லாந்தர் என பலரும் எழுதியிருக்கிறார்கள்

ஆண்டு சந்தா ₹100  ஆயுள் சந்தா ₹1000

முகவரி
காணிநிலம்
29,தமிழ் அகம் வி.ஐ.பி நகர்
தியாகராஜ நகர்
திருநெல்வேலி -11

9442112763
kaaninilam2018@gmail.com




TAMILNADU SCHOOL VIDEO LESSONS: THE MAGIC CHISEL - 3rd STD - TERM III - ENGLISH PR... http://tnschoolvideos.blogspot.com/2018/01/the-magic-chisel-3rd-std-term-iii.html?spref=tw

வியாழன், 15 பிப்ரவரி, 2018

நாய்கள் இப்படிதான் பூனை தேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டன

                                  1


வீரபாண்டிய கட்டப்பொம்மன், பாளையக்காரக் கோட்டையைக் கட்ட பாஞ்சாலங்குறிச்சியைத் தேர்வுச் செய்ததற்கு ஒரு காரணமிருந்தது. பூனைகள் சேர்ந்து நாய்களை விரட்டியடித்த இடம் அது. இதைக் கண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் இவ்விடம் வீரமிக்கது என்கிற முடிவிற்கு வந்து அந்த இடத்தில் ஒரு கோட்டையை எழுப்பினான்.

பூனைகள் அத்தனை உக்கிரத்துடன் நாய்களை விரட்டியக்கும் தைரியம் அவைகளுக்கு எங்கேயிருந்து வந்தது...? பூனைகளுக்கு வந்திருந்த கோபத்தின் காரணக் கதை இது.
          2
பூனை தேசம் அது. பூனைகள் வாழும் தேசத்தை பூனையின் தேசமென பூனைகளே பெயர்ச்சூட்டிக்கொண்டன. பூனை தேசம் வனங்களும், புதர்களும், குன்றுகளும் சூழ்ந்தப் பகுதியாக இருந்தது.

தன் இனத்தின் பரிணாம வளர்ச்சிதான் புலி என்பதை பூனைகள் தெரிந்து வைத்திருந்தன. ஆனாலும் தான் வேறு புலி வேறு என்று வேறுபடுத்திகொள்ளுமளவிற்கு பூனைகளுக்கு அறிவு இருந்தது. பூனைகள், தான் புலியைப் போலிருக்கிறோம் என ஒரு நாளும் அவை புலி வாழ்க்கை வாழ்ந்ததில்லை. பூனையின் வாழ்க்கையைத்தான் பூனைகள் வாழ்ந்துகொண்டிருந்தன.
பூனையின் தாய்மொழி ‘மியாவ்’. ‘மியாவ்’ மொழியை அவைகள் மிக உயர்வாகக் கருதின. அம்மொழி இல்லாமல் தன்னால் ஒரு காலமும் வாழ முடியாது என்பதை அவை புரிந்துவைத்திருந்தன. அவை பேசும் மொழியை அதன் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தன. ‘மியாவ்’ என அழைக்கையில் அதற்குள் எழும் புத்துணர்வால் அதன் இனத்தோடு அவை கூடி வாழ்ந்தன.

ஒரு கட்டத்தில் பூனையின் தேசத்திற்குள் நாய்கள் புகுந்தன. நாய்கள் எப்பொழுதும் அடுத்த எல்லைக்குள் வாலைச் சுருட்டிக்கொண்டு பயந்து பதுங்கி நுழையக்கூடியவை. அப்படியாகவே அவை பூனையின் தேசத்திற்குள் நுழைந்தன. நாய்களுக்கு உணவு இன்னதென்று இல்லை. அவை கண்டதைத் தின்று கண்ட இடத்தில் படுத்து வாழ்வதாக இருந்தன.
நாய்கள் படுத்து உறங்க ஒரு வெட்டவெளி போதுமானதாக இருந்தது. அது தன் சுத்தத்தைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை. எந்நேரமும் தின்பதற்கு ஏதேனும் கிடைக்குமா என நாக்கைத் தொங்கவிட்டவாறு அலைவதாக இருந்தன. அப்படியாக அலையும் நாய்களுக்கு  ஒன்றின் மீது மட்டும் முழு கவனமும் இருந்தது. அது அதன் தாய் மொழியான ‘ லொள் லொள்...’ . அம்மொழியை மற்ற உயிரிகளிடத்தில் பரப்ப வேண்டும் என கர்வம் கொண்டன.

பூனைகளின் வாழ்க்கை தொன்மையானது. நாய்கள் தோன்றுவதற்கு முன்னரே பூனைகள் பிறந்திருந்தன. பூனையுடன் சேர்ந்து அதன் மொழியும் பிறந்திருந்தது. பூனையின் பரிணாம வளர்ச்சிதான் புலி. புலிக்கு முந்தையது பூனை. ஆனால் புலிக்கு பிந்தையது நாய்.
மிதமான உணவைத் திங்கும் பழக்கத்தை பூனைகள் கொண்டிருந்தன. நாய்களைப் போல அவை நாறிப்போன உணவுகளை தின்பதில்லை. தின்றதை கண்ட இடத்தில் கக்கி வைப்பதில்லை. சிறுநீர், மலம் கழித்தால் அதை மண்ணைக் கொண்டு மூடும் பழக்கத்தை பூனைகள் கொண்டிருந்தன. தன் உடம்பை நாக்கால் சுத்தப்படுத்திக்கொள்ளும் அவை படுத்து உறங்குவதற்கு ஒரு சுகாதாரமான இடத்தை தேர்வு செய்துகொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தன.

பூனையின் தேசத்தில் நுழைந்துகொண்ட நாய்கள் பூனையின் தேசத்தை ஆளத்தொடங்கின. அதன் உடல்வாகு அதற்கு துணையாக இருந்தது. முதலில் வாலைச் சுருட்டிக்கொண்டு பூனையின் தேசத்திற்குள் நுழைந்த நாய்கள் பிறகு தன்னைக் கண்டு பூனைகள் வாலைச் சுருட்டிக்கொண்டு நடக்க வேண்டும் என கட்டளை இட்டன.

நாய்கள் அதன் எல்லைகளைப் பிரித்துகொண்டன. ஆளுக்கொரு புதர்களைப் பிடித்துகொண்டன. தன்னைச் சுற்றி எல்லை வகுத்துகொண்டு அதனதன் எல்லையில் நின்றுகொண்டு வாலை ஆட்டிக்கொண்டு காது மடல்கள் தலையில் அடித்துகொள்ளும்படியாக அதன் மொழியில் உரக்கப் பேசிக்கொண்டன.

‘ லொள்....’ ( இது நமது மொழி)
‘ லொள்...லொள்....’ ( நமது மொழி சிறந்த மொழி)
‘ லொள்...வவ்....லொள்.....’ ( நமது மொழி தெய்வீகமானது)
‘ லொள்.....வவ்...வவ்....லொள்....’ ( நமது தெய்வீக மொழி முதன்மையானது.)


வவ்...வவ்....லொள்....வவ்....லொள்ள்....லொள்ள்.....’ ( இம்மொழியை யார் பேசினாலும் அவர்கள் எங்களைப் போலவே தெய்வீக பிறப்பாகிவிடுவீர்கள்....)’
‘ ல்லொள்....லொள்....வவ்....வவ்....’ ( எங்கள் மொழிகள் மட்டுமே சிறந்த மொழி. மற்றவை நீச மொழிகள்.)

தினம் தினம் இதைப் பேசிக்கொள்வதுதான் நாய்களின் அன்றாட வேலையாக இருந்தன. இந்த உலகை ‘ லொள்,லொள்...’ மொழி மட்டுமே ஆள வேண்டும் என்பதில் அவைகள் கவனமாக இருந்தன. அம்மொழியைப் பரப்பும் வேலையில் இறங்கின.

பூனையின் மொழி ‘மியாவ்...’. பூனைகளுக்கு அதுதான் உயர்வான மொழியாக இருந்தது. அதன் தொன்மையும், சிறப்பும் அவைகளுக்கு தெரிந்திருந்தது. அம்மொழியில் பேசுவதன் மூலமே அதன் உணர்வுகளை பரிமாறிக்கொள்ள முடிந்தது.

‘மியா..’ ( எமது மொழி இதுதான்)
‘ மியாவ்’ ( எமது மொழியில்தான் நான் பேசுவேன்)
‘ மியாவ்வ்’ ( எமது மொழியில் மட்டுமே நான் பேசுவேன்)
‘ ம்யாவ்..மியாவ்...’ ( பிற  மொழிக்கும் நான் அடிபணிய மாட்டேன்’
‘ ம்யாவ்...மியாவ்.....மியாவ்வ்...’ ( எம் மொழி எமக்கு சிறந்த மொழி)

பூனையின் தேசத்தில் பூனைகள் அதிகமாக இருந்தாலும் நாய்களின் ஆதிக்கவே மேலோங்கி இருந்தது. நாய்கள் ஓடி வருகையில் அதன் கண்ணில் படாமல் பூனைகள் ஏதேனும் ஒரு மரத்தில் ஏறி ஒளிந்துகொள்ள வேண்டும். நாய்கள் நடமாடும் பாதையில் பூனைகள் நடமாடுவது கூடாது. நாய்கள் நிற்கும் இடத்தில் பூனைகள் அதன் மொழியில் பேசக்கொள்ளக் கூடாது. மீறி பேசினால் பூனையை விரட்டி ,அடித்து, கொன்றுத்திங்கும் வேலையில் நாய்கள் இறங்கியிருந்தன. தன் இனத்தை தானே சாப்பிடும் நாய்களுக்கு பூனை உணவு பிடிக்காமல் இருக்குமா என்ன...?

ஒரு நாய் இன்னொரு நாயிடம் சொன்னது. நம் மொழியை நாம்தான் தெய்வீக மொழி என்றும், உன்னத மொழியென்றும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நம் மொழியை நாம் மட்டும் பேசுவதால் மட்டும் என்ன பெருமை வந்துவிடப்போகிறது. நாம் ஆள்வது பூனையின் தேசம். பூனையின் தேசத்தில் பிரதான மக்கள் பூனைகள்தான். நாம் பேசுகின்ற மொழியை பூனைகளையும் பேச வைத்தால் மட்டும்தான் உலகின் சிறந்த மொழி ‘லொள்...’ என்பதை நிலைநாட்ட முடியும் என ஆலோசனைக் கூறியது. அந்த ஆலோசனையை அனைத்து நாய்களும் ஏற்றுக்கொண்டன.

ஒரு நாள் நாய்கள் ஒன்று திரண்டு பூனைகளின் குடியிருப்பிற்குள் நுழைந்தன. பூனைகள் மரத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டன. ஒரு நாய் ஒரு பூனையைப் பார்த்து சொல்லியது. ‘லொள்...’ ‘ லொள்....வவ்..’

  பூனைக்கு சிரிப்பு வந்தது. தன் மீசையை ஒரு முறை தன் கால்களால் நீவி விட்டுக்கொண்டது. மொழிப் பெருமைப் பேசும் அந்நாயிடம் பூனை ‘ மியாவ்...’ என்றது. நாய்களுக்கு கோபம் வந்தது. எங்கள் ஆட்சிக்கு உட்பட்ட தேசத்தில் எமது மொழி தான் தேசிய மொழி. நீங்கள் எம் மொழியில்தான் பேச வேண்டும் என்கிற கோணத்தில் நாய்கள் ஊழையிட்டன. தன் அகோரப்பற்களைக் காட்டி மிரட்டின. பூனைகள் அதற்குரிய பதுங்கலுடன் அதன் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறின.

‘ லொள்....’ என்றது நாய்.
‘மியா..’ - பதிலுக்கு பூனை.
‘ லொள்...லொள்....’
‘ மியாவ்’
‘ லொள்...வவ்....லொள்.....’
‘ மியாவ்வ்’
‘ லொள்.....வவ்...வவ்....லொள்....’
‘ ம்யாவ்...’

‘லொள்....வவ்....லொள்....லொள்...வவ்...வவ்.....’
‘ ம்யாவ்...மியாவ்.....மியாவ்வ்...’
‘வவ்...வவ்....லொள்....வவ்....லொள்ள்....லொள்ள்.....’
‘ மியாவ்...ம்ம்யாவ்....ம்ம்யாவ்வ்....’
‘ ல்லொள்....லொள்....வவ்....வவ்....’
‘ ம்யாவ்...மியாவ்.....மியாவ்வ்...’
‘ ல்லொள்....லொள்....வவ்....வவ்....’

நாய்கள் இப்படிச் சொன்னதும் பூனைகளுக்கு வந்ததே கோபம். அதன் மீசைகள் துடித்தன. அதன் கைகளால் மீசையை நீவி விட்டுக்கொண்டன. நாசியை விடைத்தன. அவை உட்கார்ந்திருந்த மரக்கிளைகள் அத்தனை உயரத்தில் இருந்தன. அந்த உச்சியிலிருந்து ஒரு சேரக் கீழே குதித்தன. பூனைகளின் குதிப்பால் அவ்விடம் புழுதிக் காடானது. நாய்கள் அதன் அகோரப்பற்களைக் காட்டி பூனைகளை மிரட்டின. பூனைகள் பயங்கொள்ளவில்லை. என் மொழியைப் பழித்த உன்னை நான் என்னச் செய்கிறேன் பார்....என்கிற கோபத்துடன் அதன் கால் விரல்களின் நகங்களை நீட்டி பற்களைக் காட்டியபடி நாய்களின் மீது பாய்ந்தன.

அத்தனை உயரத்திலிருந்து குதிக்கும் பொழுதே பாதி மிரண்டு போயிருந்த நாய்கள் தன் மீது பாயத் தொடங்கியதும் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓட்டமெடுத்தன. பூனைகள் நாய்களை விடுவதாக இல்லை. பூனையின் தேசத்திலிருந்து நாய்களை விரட்டியடித்த பூனைகள் தன் நாட்டிற்குள் திரும்பி தன் மொழியில் பேசினால் மட்டுமே தன் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து அதன் மொழியில் உரக்கப் பேசிக்கொண்டன.

‘மியா..’
‘ மியாவ்’
‘ மியாவ்வ்’
‘ ம்யாவ்..மியாவ்...’
‘ ம்யாவ்...மியாவ்.....மியாவ்வ்...’

குறுநாவல் போட்டி 2018


சிறுகதைப்போட்டி


கடைசி தேதி மார்ச் - 24 2018