வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

குட்டியக்கா - மலையாள சிறுகதை - எம்.டி.வாசுதேவன் நாயர் @ மொழிப்பெயர்ப்பு - இராம. குருநாதன்

ஜானு , குட்டியக்கா இருவரும் சகோதரிகள். குட்டியக்கா மூத்தவள். படு கருப்பி. காது ஓரத்தில் ஒரு மச்சம். அதுவும் அசிங்கமாக.

ஜானு அழகு. எல்லோருக்கும் அவளைத்தான் பிடிக்கிறது.

குட்டியக்காவிற்கு வரன் அமையவில்லை. ஆனால் சின்னவளுக்கு வரன் நிறைய வருகிறது.

ஒரு நாள் பருவை அறுத்துக்கொள்கிறாள். முகத்தில் பவுடர் ஏற்றிக்கொள்கிறாள். அப்படியும் வரன் அமையவில்லை.

ஒரு தாழ்த்தப்பட்டவோடு காதல் பிறக்கிறது. குடும்பத்தினர் கண்டித்து செத்துப்போ என திட்டுகிறார்கள்.

குட்டியக்காவுடன் முழுக்கவே அவளுடைய சித்தி மகன் இருப்பான். அவனிடம் தூக்கத்தில் சொல்லிக்கொண்டிருப்பாள். ' தம்பி....அம்மாவையும் பெரியம்மாவையும் பத்திரமாப் பார்த்துக்கோ...' 

1 கருத்து:

  1. சுருக்கமாக, அதே சமயம் நறுக்காக கரு அமைந்துள்ள விதம் பாராட்டத்தக்கது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு