வியாழன், 10 ஜனவரி, 2019

கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன

நண்பர்களே,
2019-ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருதிற்கு
பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

2016 – ஆம் ஆண்டிலிருந்து வெளியான கவிதை தொகுப்புகளைப்  பரிந்துரைக்கலாம்.

கவிதை தொகுப்புடன் பரிந்துரைக்கடிதம் சேர்த்து அனுப்பவும்.

கவிதை தொகுப்புடன்  பரிந்துரைக்கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை.
38/22, நான்காவது பிரதான சாலை
கஸ்தூரி பாய் நகர், அடையாறு, சென்னை - 600 020.
அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 31.03.2019

அன்புடன் ,
வேல் கண்ணன்,
கார்த்திகேயன் ராமனுஜம்.
அறங்காவலர்.
கவிஞர் ஆத்மநாம் அறக்கட்டளை,
சென்னை 20.

சனி, 5 ஜனவரி, 2019

விமர்சனங்கள்


 05.01.2019

சபரிமலை விவகாரம் - தினகரன் இதழ் தலையங்கம்

கடலுக்குள் பெண்கள் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது, பிராமணர்கள் கடல் தாண்டி வெளிநாடு செல்லக்கூடாது,  பெண்கள் விண்வெளிக்கு பயணிக்கக்கூடாது, இடுகாட்டிற்கு பெண்கள் முச்சந்தியைத் தாண்டி செல்லக்கூடாது,
பூப்பெய்த பெண்கள் அந்த மூன்று நாட்கள்  கோயிலுக்குச் செல்லக்கூடாது, ஐயப்பன் கோயிலுக்கு அத்தகைய பெண்கள் எப்பொழுதும் மாலையிட்டு  செல்லக்கூடாது  இப்படியாக இந்து மதம் கட்டமைக்கும் ஐதீகம் நிறைய உண்டு. ஐதீகம் என்பதே நம்பிக்கைகுரிய ஒன்றுதான் மறுப்பதற்கில்லை.  

மூன்று வாரத்திற்கு முன்பு THE HINDU  நடுப்பக்கத்தில்   அரபிக்கடலில் 
மீன் பிடிக்கும் ஒரு மீனவப் பெண்ணைப் படம் பிடித்து இந்தியாவில் நடுக்கடலில்  மீன் பிடிக்க உரிமைப் பெற்ற முதல் பெண் என்கிற குறிப்புடன் பேட்டி வெளியாகியிருந்தது. விண்வெளிக்குச் சென்று திரும்பி பெண்களின் பட்டியல் நிறைய உண்டு. இடுகாட்டில் பிணத்தை எரிக்கும் பெண்களை நிறைய பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் வேறு வழியே இல்லாமல் அனுமதித்த நம்மால் ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் முரண்பட்டிருக்கிறோம். 

இது குறித்து பத்திரிகைகள்

பெண்களுக்கு சமத்துவம் வேண்டும்

அவர்கள் வழிபட மாதங்கள் தனியே ஒதுக்கலாம்

சீசன் காலமான இந்நேரத்தில் பெண்களை இத்தனை அவசரமாக அனுமதித்திருக்க வேண்டியதில்லை

முல்லைப்பெரியாறு விஷயத்தில் உச்சநீதி மன்றத்தை மதிக்காத கேரள அரசு இதை மட்டும் இத்தனை அவசரத்தில் நடைமுறைப்படுத்த காரணம் என்ன என்பதாக பல பத்திரிகைகள் தலையங்கம் எழுதியிருக்கின்றன.

கோவில் விசயத்தில் மட்டுமல்ல எத்துறையிலும்  பெண்களுக்கு சமத்துவம் நிலவ வேண்டும் என்பது என் விருப்பம். 

நேற்றைய தினம் மாலை முரசு என்கிற பத்திரிகை ' பிடிவாதம் பிடிக்கும் பினராயி அரசு ' என்கிற தலைப்பில் தலையங்கம் தீட்டியிருந்தது. அத்தலையங்கம் முல்லைப்பெரியாறு - சபரிமலை இவ்விரு பிரச்சனைகளையும் உச்சநீதி மன்ற தீர்ப்பையொட்டி அமுல்படுத்தும் வேகத்தை மையமாக வைத்து எழுதியிருந்தது.

இன்றைய தினகரன் இதழில் ' அரசே துணை போவதா? ' என்கிற தலைப்பில் தலையங்கம். அதில் சபரிமலை ஐயப்பன் விவகாரத்தில் கலவரத்தைத் தூண்டுவது ஆளும் அரசு போன்றும் ஆண்கள் மது, போதை பிரச்சனையிலிருந்து விடுபட ஐயப்பன் தரிசனமே வழி என்பதைப் போலவும் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் மீது காட்டு விலங்குகள் தாக்குதல் தொடுக்காமல் காப்பது  ஐயப்பன் என்பதைப் போலவும் எழுதப்பட்ட தலையங்கத்தை வாசிக்கையில் நாத்திக - திராவிட - பகுத்தறிவு  இயக்க குடும்ப வழி பத்திரிகைதானா இது என ஒரு முறை கிள்ளிப்பார்த்துக்கொள்ள தோன்றியது. 'சபரிமலையிலுள்ள விலங்குகள் கூட ஐயப்பன் என்கிற சொல்லுக்கு கட்டுப்பட்டு யாரையும் துன்புறுத்தியது கிடையாது...' என்கிற வரிகளெல்லாம் தினகரன் இதழுக்கு அழகா, பொருந்துமா , ஏற்குமா..? என்று புரியவில்லை. அத்தலையங்கத்தின் வழியே அதே கேள்வியை இப்படி கேட்கத் தோன்றுகிறது. ஐயப்பன் கோயிலுக்குக் கட்டுப்பட்டு விலங்குகளே பக்தர்களைத் துன்புறுத்தாத பொழுது பக்திப்பெருக்கால் அக்கோயிலுக்கு வரும் பெண்களை ஆண்கள் துன்புறுத்துவது சரியா? 



வியாழன், 3 ஜனவரி, 2019

2019

ஜனவரி - சங்கு இதழில் 


ஜனவரி - அமுதசுரபி இதழில்

பேசும் புதிய சக்தி இலக்கிய விழாவில் அழகிய பெரியவனின் ' அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார் ' நூலினை அறிமுஸகம் செய்து பேசிய போது...ஜனவரி இதழில்

பிப்ரவரி -




மூங்கில் வனம் - மூன்றடி கானம்

கோவையில்  ஒரு நிகழ்வில் கவிதை நூல் குறித்து பேசிய கவிஞர் இராகவன்  கவிதைகளான கவிதைகள் குறித்து பேசிய அவர் சில கவிதைகளை எடுத்தாண்டார். அதிலொரு கவிதை யானை குறித்த கவிதையாக இருந்தது.  அவர் ஒப்பித்த வேகத்திற்கு என்னால்  அதை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் கவிதையின் ஒற்றைச் சொல் எனக்குள் தொண்டையில் சிக்கிக்கொண்ட மீன் முள்ளைப்போல வருடிக்கொண்டே இருந்தது. பழனி இலக்கிய சந்திப்பில் கிடைத்த புதிய நட்பான கூடல் தாரிக்கின் மூங்கில் வனம் தொகுப்பில் அக்கவிதை இருந்தது.



வனத்தையும் வாழ்வையும்
இழந்து
சபிக்கப்பட்ட யானையைத்தான்
ஆசிர்வதிக்க
நிர்ப்பந்திக்கிறான் பாகன்

இக்கவிதையில் யானையை வெறும் யானையாக மட்டும் நான் உள்வாங்கிக்கொள்ளவில்லை.  வாழ்வாதாரத்தையும் வாழ்வையும் நாளுக்கு நாள் இழந்து தவிக்கும் நம் வாழ்க்கைதான் யானையின் வாழ்த்தலாக இருக்கிறது.

கூடல் தாரிக்கின் மூன்றாவது தொகுப்பு இது.

கஜல் வடிவத்தில் எழுதப்பட்ட மூன்றடி நான்கடி சொற்பின்னலே மொத்தக் கவிதையும். அழகை வர்ணிக்கும் வானவில் வரிகள்.

மழையின் சாயலில்தான்
இருக்கிறார்கள்
கருணை கொண்ட
மனிதர்கள் யாவரும்

முதல் கவிதை மெல்லிய தூறலாய் மனதிற்குள் மாமழை பெய்கிறது. வாசிப்பவனை கருணையாளனாக கரைக்கிறது.

வேழம் வளைத்த
மூங்கிலென
சட்டென நிமிர்கிறாள் தலைவி
வனம் முழுவதும்
பிளர்கிறது அன்பு

கரைந்துண்ணும் அன்பை பிளிரச் செய்யுமிடத்தில் பேரருவமாகிறது அன்பு.  இப்படியாக அடிமேல் அடி எடுத்துவைக்கும் அழகால் வாசிப்பின் தாகத்தை மேலும் தாகமூட்டும் தொகுப்பாக வந்திருக்கிறது மூங்கில் வனம். நல்ல தொகுப்பு.
ஓவியா பதிப்பகம்.  ஆசிரியருக்கு எனது - ழ் -